Sunday, December 06, 2009

கடைசி ஆசை



இறைவா
சாவின் விளிம்பில்
நிற்கும் என்னிடம்
கடைசி ஆசை கேட்காதே
வாழவிரும்பும் நான்
மீண்டும் செத்து போவேன்
அவளால்.....

கருப்பு தேவதையே !!



கரு விழிகளில் தினம்
கரு மை பூசி
கருத்த கூந்தலில்
கருமை தெரிய வாரி ,
தினம் ஒரு கருப்பில் புடவை உடுத்தும்
நீ
காதலிக்க
எனது கருப்பு போதாதா ?

நான் தெரியவில்லையா ?



வாஸ்தவம் போல் பேசி
வசியம் செய்யும்
வன்முறையாளன் தெரிந்த
உனக்கு ...
அதிகம் பேசாது
உன் ஆழ விழிகளில்
என்னை தேடும்
நான் தெரியவில்லையா ?