Sunday, September 06, 2009

என் தங்கைக்காக !!

யாருமற்ற சாலையில்.....
என் ஒற்றை விரல் நுனி பிடித்து,
உன் எதிர் காலத்தை
என் தேடலில் வைத்து,
எனக்கு அநீத பொறுப்பு தந்து,
என்னை தவிர
சந்தோசம் மட்டுமே உன் சொந்தமாக
என்னுடன் பயணிக்கும் நீ
என் தங்கை மட்டுமல்ல
என் குழந்தையும் கூட.......

உன் பந்தம் இனிமை தான்!
ஆனால்.....
உயிருக்குள் பெரும் பாரத்தை
அல்லவா ஏற்படுத்துகிறது......



Friday, September 04, 2009

லஞ்சம்


மந்திரம் ஓத பூசாரிக்கு
தவறாமல் பத்து ரூபாய்
தரும் அப்பா.
விஷேச நாட்களில்
மறக்காமல் மஞ்சள் துணியில்
காசு முடியும் அம்மா .
வீட்டு பூச்செடிக்கு
நாள் தவறாமல்
நீர் ஊற்றிக்கொண்டு நான் !