யாருமற்ற சாலையில்.....
என் ஒற்றை விரல் நுனி பிடித்து,
உன் எதிர் காலத்தை
என் தேடலில் வைத்து,
எனக்கு அநீத பொறுப்பு தந்து,
என்னை தவிர
சந்தோசம் மட்டுமே உன் சொந்தமாக
என்னுடன் பயணிக்கும் நீ
என் தங்கை மட்டுமல்ல
என் குழந்தையும் கூட.......
உன் பந்தம் இனிமை தான்!
ஆனால்.....
உயிருக்குள் பெரும் பாரத்தை
அல்லவா ஏற்படுத்துகிறது......

வார்த்தைகளில் அர்த்தத்தை மீறி உணர்வை உணர முடிகிறது.
ReplyDelete